ட்விஸ்ட் வைத்த செந்தில் பாலாஜி.. ஆட்டம் கண்ட ED தரப்பு.. நீதிமன்றம் அதிரடி.!!
Senthil Balaji submit a new petition in Chennai court
சட்டவிரோத பண பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் தன்னை கைது செய்ததை ரத்து செய்யக்கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வரும் ஜூன் 4ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வங்கி சார்பில் அசல் ஆவணங்கள் முழுமையாக சமர்ப்பிக்கப்படும் வரை சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கின் விசாரணையை ஒத்தி வைக்க வேண்டும் என சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பில் மீண்டும் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த பணம் இது அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு சென்னை மாவட்டம் முதன்மை அமருவேன் நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஜூன் 4ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது. இதன் காரணமாக வழக்கில் இருந்து விடுவிக்க கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீது இன்று உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை.
இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 36 ஆவது முறையாக நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றத்தில் காணொளி வாயிலாக ஆஜர் படுத்தப்பட்ட செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஜூன் நான்காம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார்.
English Summary
Senthil Balaji submit a new petition in Chennai court