தமிழகத்தில் கிராம உதவியாளர் காலிப்பணியிடங்கள் நிரப்ப அரசாணை வெளியீடு! புதிய நடைமுறைகள் அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


மூன்று ஆண்டுகளாக நிரப்பப்படாமல் இருந்த கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்பும் வகையில், தமிழக அரசு புதிய அரசாணையை வெளியிட்டுள்ளது.

இதற்கமைய, தமிழகமெங்கும் 2279 காலிப்பணியிடங்களை விரைவில் நிரப்ப மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் நிர்வாக ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

புதிய நெறிமுறைகள்:

* பத்தாம் வகுப்பு தேர்ச்சி இருந்தால் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். தமிழைப் பாடமாகக் கொண்டு தேர்வு எழுதியிருக்க வேண்டும்.
* தேர்ச்சி அடைந்தவர்களோ, தோல்வியடைந்தவர்களோ என்ற வேறுபாடு இல்லாமல், தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையாக மதிப்பீடு செய்யப்படும்.
* இருசக்கர வாகன ஓட்டத்திறன் அல்லது ஓட்டுநர் உரிமம் உள்ளவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்படும்.
* நேர்முகத் தேர்வின்போது வாசிப்பு, எழுத்துத்திறன் சோதிக்கப்படும்; அதற்கேற்ப மதிப்பெண்கள் அளிக்கப்படும்.

தேர்வு மற்றும் நியமன செயல்முறைகள் முறையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றவேண்டும் என்றும், தேர்வு முடிவுகள் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலக இணையதளத்தில் வெளியிடப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விதிமீறல்கள் இருப்பின், கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு எச்சரித்துள்ளது.

இந்நிலையில், விரைவில் அறிவிப்பு வெளியாவும் என எதிர்பார்க்கப்படுகிறது. உள்ளூரிலேயே வேலை செய்ய விரும்பும் இளைஞர்கள் இந்த வாய்ப்பை தவறவிட வேண்டாம்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

VAO Assitent job announce TN Govt Order Tamilnadu


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->