ஈரோட்டில் பரபரப்பு.! வேன் டிரைவர் அடித்துக்கொலை.! மர்ம நபர்களின் வெறிச்செயல் - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டத்தில் வேன் டிரைவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் சாண்ர்பதி பகுதியை சேர்ந்தவர் வேன் டிரைவர் மாரிமுத்து (37). இவரது மனைவி கல்யாணி. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் நேற்று முன்தனம் மாலை மோட்டார் சைக்கிளில் வெளியே சென்ற மாரிமுத்து நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை. இதையடுத்து நேற்று காலை கோவை சாலையில் உள்ள வாய்க்கால் மேட்டில் மாரிமுத்து ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்துள்ளார்.

இதைப் பார்த்த, அவ்வழியாக சென்றவர்கள் இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மாரிமுத்துவின் உடலை கைப்பற்றிய பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து மாரிமுத்துவின் பிரேத பரிசோதனையில் அவரது நெற்றியில் யாரோ பலமாக தாக்கியிருப்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து போலீசார் மாரிமுத்துவை மர்ம நபர்கள் யாரோ அடித்துக்கொலை செய்திருப்பதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த சத்தியமங்கலம் போலீசார், மாரிமுத்துவை கொலை செய்த மர்ம நபர்கள் யார்? எதற்காக கொலை செய்தார்கள்? என்று பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Van driver beaten to murder in erode


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->