மருத்துவமனையில் வைகோ அனுமதி..தொண்டர்கள் கவலை!
Vaiko admitted to the hospital Supporters worried
ஓரிரு நாட்களில் வைகோ மருத்துவனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைரஸ் காய்ச்சல் பரவி வருவதால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும்மக்கள் கூட்டம் நிறைந்த இடங்களில் முககவசம் அணிதல் உள்ளிட்டவற்றை பின்பற்ற வேண்டும் என்று' சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளனர்.பல மாவட்டங்களில் மருத்துவமனைகளில் வைரஸ் காய்ச்சல் போன்றவற்றால் நோயாளிகளின் கூட்டம் அதிகமாக உள்ளது.
இந்த நிலையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களாக சளி, காய்ச்சல், இருமல் காரணமாக அவதிப்பட்டு வந்த நிலையில் இன்று அவருக்கு காய்ச்சல் அதிகமானது. இதனையடுத்து வைகோ சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஓரிரு நாட்களில் வைகோ மருத்துவனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Vaiko admitted to the hospital Supporters worried