செய்தியாளர் சந்திப்பில் காலை பிடித்து கதறிய நிர்மலா சீதாராமன் - நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் பல்வேறு மாநிலங்களுக்குச் சென்று தங்களது வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கோயம்புத்தூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை ஆதரித்து பாஜக மகளிர் அணி சார்பில் நேற்று நடைபெற்ற பேரணியில் கலந்துகொண்டார்.

சுமார் 2 கி.மீ., தொலைவுக்கு நடைபெற்ற இந்தப் பேரணியில் நிர்மலா சீதாராமன் திறந்த வாகனத்தில் நின்றவாறு வேட்பாளர் அண்ணாமலையை ஆதரித்து வாக்கு சேகரித்தார். இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அவர் தெரிவித்ததாவது:- "பிரதமர் மோடி மக்கள் சேவையை முன்னெடுத்து மேற்கொள்ளும் திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு சென்றடைந்துள்ளது என்று பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது, திடீரென்று நிர்மலா சீதாராமன்.. அய்யய்யோ.. என்று வலியால் துடித்து காலை பிடித்தபடி”அது Fracture ஆன கால் என்று செய்தியாளரிடம் தெரிவித்தார். இதைகேட்ட உடனே செய்தியாளர்கள் ரெஸ்ட் எடுத்த கொள்ளங்கள் என கூறியபோது பரவாயில்லை என்று மீண்டும் பேசினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

union minister nirmala seetharaman press meet in coimbatore


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->