வசமாக சிக்கிய உதயநிதி! உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பறந்த கடிதம்! - Seithipunal
Seithipunal


திமுக அமைச்சர் உதயநிதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

பிரபலங்கள், ஓய்வு பெற்ற நீதிபதிகள், எழுத்தாளர்கள் உள்ளிட்ட 262 பேர் இந்த கடிதத்தை  உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எழுதியுள்ளனர்.

உதயநிதியின் பேச்சு சனாதன தர்மத்தை பின்பற்றுவோர் மனதை புண்படுத்தி உள்ளதாக கூறி, தலைமை நீதிபதிக்கு இந்த கடிதம் எழுதப்பட்டுள்ளது.

மேலும், உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அந்த கடிதத்தில் வலியுறுத்தியுள்ளனர்.

வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசுவோர் மீது, அரசு மற்றும் காவல் துறையினர் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்யலாம் என்றும் இந்த கடிதத்தில் சுட்டிக்காட்டி உள்ளனர்.

உதயநிதி மீது வழக்கு பதிவு செய்யவில்லை எனில், அது உச்ச நீதிமன்ற உத்தரவை மீறும் வகையில் இருக்கும் என்றும், வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசியதோடு அதற்கு வருத்தம் தெரிவிக்கவும் உதயநிதி மறுத்துவிட்டார் என்றும் அந்த கடிதத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Udhaynithi Stalin sanatana dharma issue letter to SC


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->