காய்கறிக்குள் மறைத்து குட்கா கடத்தல் - 2 பெண்கள் கைது - Seithipunal
Seithipunal


கர்நாடகாவில் இருந்து காய்கறிக்குள் மறைத்து வைத்து குட்கா கடத்தி வந்த இரண்டு பெண்களை போலீசார் கைது செய்தனர்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் நகருக்குள் குட்கா கடத்தி வரப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலையடுத்து போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது கர்நாடகா பேருந்திலிருந்து காய்கறி மூட்டையுடன் இறங்கிய இரண்டு பெண்களிடம் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரித்தனர். இதையடுத்து காய்கறி மூட்டையை திறந்து பார்த்ததில் 180 குட்கா பாக்கெட் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து இரண்டு பெண்களிடம் விசாரணை நடத்தியதில், கர்நாடகா மாநிலம் மைசூருவை சேர்ந்த தெப்பம்மா மற்றும் கங்கா என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்த 180 குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் இரண்டு பேரையும் கைது செய்தனர். மேலும் போலீசார் இந்த குட்கா கடத்தல் தொடர்பாக, இரண்டு பெண்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Two women arrested for smuggling gutka by hiding vegetables in nilgiri


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->