அதிகாலையிலேயே சோகம் - விக்கிரவாண்டி அருகே கார் மோதி 2 பேர் பலி; 3 பேர் படுகாயம்.!  - Seithipunal
Seithipunal


விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே ராதாபுரம் பகுதி சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்றின் டயர் திடீரென வெடித்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, எதிரே வந்த இரண்டு சக்கர வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது. 

இந்த சம்பவத்தில், இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், சிறுவன் உள்பட 3 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தைப் பார்த்த வாகன ஓட்டிகள் உடனே போலீஸாருக்குத் தகவல் அளித்தனர்.

அதன் படி போலீசார் விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். 

இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதனை சரி செய்த போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கார் டயர் வெடித்து இரண்டு சக்கர வாகனங்களின் மீது மோது 2 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

two peoples died and three peoples injured for accident in vikravandi


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->