கோவை || திட்டம் போட்டுச் சென்ற கொள்ளையர்கள் - காத்திருந்த அதிர்ச்சி.! - Seithipunal
Seithipunal


கோவை || திட்டம் போட்டுச் சென்ற கொள்ளையர்கள் - காத்திருந்த அதிர்ச்சி.!  

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே மூன்று கொள்ளையர்கள் மகாலட்சுமி என்பவரின்  கழுத்தில் இருந்த செயினை பறித்து கொண்டு, மூதாட்டி ஒருவரிடமும் கைவரிசையை காட்ட முயற்சி செய்துள்ளனர்.

ஆனால் அந்த மூதாட்டி சுதாரித்துக் கொண்டு கத்திக் கூச்சலிட்டார். இந்த சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் கொள்ளையர்களைத் துரத்திப் பிடிக்க முயன்றுள்ளனர்.

அப்போது அவர்கள் மூவரும் அங்கிருந்த 60 அடி ஆளமுள்ள தோட்டத்து கிணற்றில் தவறி விழுந்தனர். அவர்களில் இரண்டு பேர் கிணற்றிலிருந்து வெளியே வந்து தப்பித்துச் சென்றுள்ளனர்.

இதையடுத்து மக்கள் கிணற்றில் இருந்த நபரை பிடிப்பதற்காக, காவல்துறைக்கும், தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவித்தனர். அதன் படி அவர்கள் விரைந்து வந்து கிணற்றில் கயிறு கட்டி இறங்கி பல மணி நேரம் போராடி அந்த நபரை மீட்டனர். 

அவரிடம் நடத்திய விசாரணையில், அந்த நபர் கம்பத்தைச் சேர்ந்த ரமேஷ் என்ற அருண்முத்து என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து அந்த நபரைக் கைது செய்தனர். மேலும் தப்பியோடிய நபர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

two peoples arrested for robbery in covai


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->