’தாயுமானவர்’ திட்டத்தின் பெயர் மாற்றம்: தவெக அரசின் புதிய அறிக்கையால் பரபரப்பு!
TVK Govt Renames DMK Era Thayumanavar Doorstep Ration Scheme to Public Distribution Scheme
தமிழ்நாட்டில் முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட 'தாயுமானவர்' திட்டத்தின் பெயர், தற்போது ‘பொது விநியோகத் திட்டம்’ என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் ‘முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்’ என்பதற்குப் பதிலாக ‘பொது விநியோகத் திட்டம்’ எனக் குறிப்பிட்டுள்ளது இதனை உறுதிப்படுத்தியுள்ளது.
தொடரும் பெயர் மாற்றங்கள்
தமிழகத்தில் தவெக தலைமையிலான அரசு அமைந்தது முதல், முந்தைய ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பல்வேறு திட்டங்களின் பெயர்கள் தொடர்ந்து மாற்றப்பட்டு வருகின்றன. ஏற்கனவே ‘நான் முதல்வன்’, ‘மகளிர் விடியல் பயணம்’ மற்றும் ‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்’ ஆகியவற்றின் பெயர்கள் மாற்றப்பட்ட நிலையைத் தொடர்ந்து, தற்போது ‘தாயுமானவர்’ திட்டத்தின் பெயரும் மாற்றப்பட்டுள்ளது.
‘தாயுமானவர்’ திட்டத்தின் நோக்கம்
கூட்டுறவுத் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் இத்திட்டம், தமிழ்நாட்டில் உள்ள மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினரின் இல்லங்களுக்கே நேரடியாகச் சென்று அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய நியாயவிலைக் கடைப் பொருட்களை விநியோகிக்கும் ஒரு முக்கிய சமூக நலத் திட்டமாகும்.
தற்போது இத்திட்டத்தின் பெயர் மாற்றப்பட்டிருப்பது அரசியல் களத்தில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
English Summary
TVK Govt Renames DMK Era Thayumanavar Doorstep Ration Scheme to Public Distribution Scheme