காதல் திருமணம் செய்த பெண் மர்ம மரணம்... லவ் ஜிகாத்?.. திருச்சியில் அதிர்ச்சி.!
Trichy SriRangam girl Death Mystery Married with Muslim man Love Jihad Murder Hindu Party Said
காதல் திருமணம் செய்த பெண்மணி மர்ம மரணம் அடைந்தது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவானைக்காவல் பகுதியை சார்ந்தவர் சிக்கந்தர் பாஷா. அங்குள்ள மற்றொரு தெரு பகுதியை சார்ந்த பெண்மணி தனலட்சுமி (வயது 20). இவர்கள் இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
கடந்த 2 வருடத்திற்கு முன்னதாக திருமணம் செய்து வாழ்ந்து வந்த நிலையில், இருவருக்கும் ஒரு வயதுடைய பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், கடந்த 11 ஆம் தேதி இரவு வேளையில் மின்விளக்கு போடும் போது, மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது.
இவரை மருத்துவமனைக்கு அழைத்து வருகையில், அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும், ஆர்.டி.ஓ விசாரணையும் நடைபெற்று வரும் நிலையில், அவர் நயவஞ்சகமாக ஏமாற்றப்பட்டு கொலை செய்யப்பட்டுவிட்டதாக தனலட்சுமியின் பெற்றோர்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதுமட்டுமல்லாது சில இந்து அமைப்புகள் இதனை லவ் ஜிகாத் கொலை என்றும் தெரிவித்து வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Trichy SriRangam girl Death Mystery Married with Muslim man Love Jihad Murder Hindu Party Said