சங்கடஹர சதுர்த்தியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்.!  - Seithipunal
Seithipunal


சங்கடஹர சதுர்த்தி நாளன்று அதிர்ஷ்டம் பெரும் ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

கடக ராசிக்காரர்களுக்கு மனதை வாட்டி வதைத்த கவலைகள் குறையும். ஆன்லைன் வர்த்தகம் மூலம் பணவரவு அல்லும். குடும்பத்தில் நல்ல காரியங்கள் நடைபெறும். சம்பள உயர்வு,பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. விநாயகர் பெருமானின் அருளால் மன உறுதி ஏற்படும். வீட்டில் குழந்தைகள் சத்தம் எதிரொலிக்கும். பழைய வீட்டை புதுப்பித்து அலங்காரம் செய்வீர்கள். திருமண வாழ்க்கை இனிமையாக அமையும். 

சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த நாளில் ஐஸ்வர்யம் நற்பலன்கள் கிடைக்கும். பண விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். புதிய தொழில் தொடங்க முயற்சி செய்வீர்கள். வெளிவட்டார செல்வாக்கு அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்களுக்கு விருந்து வைப்பீர்கள். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கைக்கு இந்த காலம் நல்லது. சகோதர சகோதரி உறவு வலுப்பெறும். 

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த நாளில் நல்ல சூழ்நிலை உருவாகும். புதிய ஆடைகள் வாங்குவார்கள். நகைகள் வாங்குவதில் அக்கறை காட்டுவார்கள். பிள்ளைகள் படிப்பில் அக்கறை காட்டி பெற்றவர்களை மகிழ்ச்சி படுத்துவார்கள். பொருளாதார ரீதியில் வலுவடைவார்கள். புதிய வேலையை தொடங்க இந்த நாள் நல்ல நாளாக அமையும். பணவரவு அதிகரிக்கும். 

மகர ராசிக்காரர்களுக்கு இந்த நாள் ஒரு முக்கிய முடிவு எடுக்கக் கூடிய நாளாக அமையும். ரியல் எஸ்டேட் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய வீடு கட்டி குடி போவார்கள். சகோதரருக்கு பண உதவி செய்வார்கள். கலை துறையினர் புதிய சாதனை படைப்பார்கள். பங்குச்சந்தை வியாபாரத்தில் எதிர்பாராத விதமாக பணவரவு அதிகரிக்கும். தெய்வ திருப்பணிகளில் ஈடுபடுவீர்கள். புதிய சொத்து வாங்குவது ஆர்வம் காட்டுவார்கள். 

மீன ராசிக்காரர்களுக்கு இந்த நாளில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தில் நற்செய்தி வரும். புதிய வேலை கிடைக்கும். அரசியல் பதவி அல்லது சிறப்பு பொறுப்பு பெற வாய்ப்பு உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sangadahara Chaturthi pooja palankal


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->