சூர்யகுமார் யாதவ் சதம்..மும்பை அணி அதிரடி வெற்றி!! - Seithipunal
Seithipunal


ஐபிஎல் கிரிக்கெட்டில் அடிமேல் அடி வாங்கி கொண்டிருந்த மும்பை இந்தியன்ஸ் அணி தற்போது திருப்பி அடிக்க தொடங்கியுள்ளது. நேற்று ஹைதராபாத் அணியுடனான போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்றுள்ளது. 10  அணிகள் இடையிலான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. நேற்று இரவு மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த 55 வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சேம்பியான மும்பை இந்தியன்ஸ் அணியும்  ஹைதராபாத் அணியும் மோதின.

டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் பாண்டியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து, முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி ஆரம்பமே அதிரடியாக அமைந்தது. ஹைதராபாத் ஆட்டகாரகளான ஹீட் 30 பந்துகளில் 48 ரன்களை குவித்து வெளியேனார். அதன் பின் வந்தவர்கள் மும்பை அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் ஆட்டமிழந்தனர். 20 ஓவர்களில் ஹைதராபாத் அணி 8 விக்கெட்களை இழந்து 173 ரன்களை எடுத்தது.

பின்னர், 174 ரன் இலக்கை நோக்கி மும்பை அணி களம் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் இஷான் கிஷன் 9 ரன்களுக்கும் சர்மா 4 ரன்னுக்கும் தீர் 0 ரன்னுக்கும் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர். பின்னர் களமிறங்கிய சூரிய குமார் யாதவ் மற்றும் திலக் வர்மா சிறப்பான முறையில் விளையாடினார்கள். சூரியகுமார் யாதவ் சிறப்பாக விளையாடி 51 பந்துகளில் 102 ரன்களை குவித்தார். மும்பை அணி 17.2 ஓவர்களில் 174 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Suryakumar Yadav hundred Mumbai team wins


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->