சாலையில் உறங்கியவரின் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்த சைக்கோ.. திருச்சியில் பயங்கரம்.!!
Trichy murder police investigation
திருச்சி மாவட்டத்தில் உள்ள இ.பி.சாலை பகுதியை சார்ந்தவர் ஜப்பான் என்ற செல்வராஜ் (வயது 55). இவரது சொந்த ஊர் அரியலூர் மாவட்டத்தில் உள்ள கொட்டக்குடி ஆகும். இவர் கடந்த 15 வருடத்திற்கும் மேலாக மலைக்கோட்டை பகுதியில் பழைய பேப்பர், பிளாஸ்டிக் மற்றும் பாட்டில் ஆகியவற்றை எடுத்து வியாபாரம் செய்து வந்துள்ளார்.
இவருக்கு திருமணம் முடிந்து மனைவி மற்றும் நான்கு குழந்தைகள் உள்ள நிலையில், இவர் கடந்த சில வருடத்திற்கு முன்னதாக குடும்பத்தை பிரிந்து வந்துள்ளார். மேலும், கிடைக்கும் வருமானத்தை வைத்து சாப்பிட்டு, சாலையோரத்தில் வசித்து வந்துள்ளார். பெரும்பாலும் அங்குள்ள கோட்டை காவல் நிலையத்திற்கு அருகேயுள்ள செருப்பு கடை பகுதியில் தூங்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
சனிக்கிழமை காலை வழக்கம் போல தூங்கிக்கொண்டு இருந்த நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் மேலக்குப்பம் பள்ளிவாசல் பகுதியை சார்ந்த காஜாமைதீன் (வயது 38) என்பவர் வந்துள்ளார். இவர் கடந்த 10 வருடத்திற்கும் மேலாக காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் துணி வியாபாரம் செய்து வரும் நிலையில், மனநலம் பாதிக்கப்பட்ட நபராவார்.
சம்பவத்தன்று அதிகாலை காஜாமைதீன் தூங்கிக்கொண்டு இருந்த செல்வராஜின் தலையில் கல்லை போட்டு கொலை செய்துள்ளார். சம்பவ இடத்திலேயே செல்வராஜ் பலியாகவே, காஜாமைதீன் சம்பவ இடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளான். பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், காஜாமைதீனை கைது செய்தனர்.
அவர் திருச்சிக்கு வந்தது எதற்காக? சைக்கோவாக மாறியது எதற்காக? என்பது குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.
Tamil online news Today News in Tamil
English Summary
Trichy murder police investigation