விடிய விடிய போராட்டம்! திருச்சி கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை! உள்ளே வந்த எஸ்பி வருண்குமார்! - Seithipunal
Seithipunal


திருச்சி என்.ஐ.டி கல்லூரியில் மாணவிக்கு ஊழியர் அளித்த பாலியல் தொல்லை அளித்தது கண்டித்து, நள்ளிரவு முதல் தொடர் போராட்டத்தில் மாணவ, மாணவிகள் ஈடுபட்டனர்.

பாலியல் தொல்லை அளித்த முதுகுளத்தூரை சேர்ந்த ஒப்பந்த ஊழியர் எலக்ட்ரீசியன் கதிரேசனை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.

விடுதி அறையில் தங்கி இருந்த மாணவிக்கு பாலியல் தொல்லை விடுக்கப்பட்ட இந்த விவகாரத்தில், விடுதி வார்டன் பொறுப்பேற்க வேண்டும் என்று மாணவர்கள் போராட்டம் நடத்திய நிலையில், மாணவிகளின் உடை  குறித்து வார்டன் விமர்சனம் செய்ததாக தெரிகிறது.

இதனையடுத்து வார்டன் மன்னிப்பு கேட்க வேண்டும், அவரை மாற்ற வேண்டும் என்று விடிய விடிய மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில், வார்டன் மன்னிப்பு கேட்டதால் மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இந்த சம்பவம் குறித்து திருச்சி எஸ்.பி.வருண்குமார் அளித்த பேட்டியில், 

"மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். பெண் காவலர்கள் மூலம் மாணவிகளிடம் தகவல்களை கேட்டுப்பெற உள்ளோம்.

பாதிக்கப்பட்ட மாணவி தரப்பில் புகார் அளித்த நிலையில், உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வார்டானை மாற்றுவது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது" என்று திருச்சி எஸ்.பி. வருண்குமார் தெரிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Trichy College Students Protest TN Police SP Varunkumar 


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->