13 வயது சிறுமிக்கு லவ் லெட்டர்.. உதவியாக தாய்.. உயிரை மாய்க்க தெரிந்த சிறுமி.. திருச்சியில் நாடக காதலன் அட்டூழியம்.! - Seithipunal
Seithipunal


திருச்சி மாவட்டத்தில் உள்ள செம்பட்டு பகுதியை சார்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி லட்சுமி (வயது 42). இந்த தம்பதியின் மகன் சிவா என்கிற ராஜரத்தினம் (வயது 20). இதே பகுதியில் 13 வயதுடைய சிறுமி வசித்து வந்துள்ளார். இந்த சிறுமி அங்குள்ள பள்ளியில் ஏழாம் வகுப்பு பயின்று வந்துள்ளார். 

இந்நிலையில், சிவா சிறுமியை ஒருதலையாக நாடககாதல் செய்து வந்துள்ளான். இதுமட்டுமல்லாது 2 முறை காப்பி பேஸ்ட் காதல் கடிதத்தையும் கொடுத்து, நான் உன்னை காதலிக்கிறேன் என்று தொல்லை செய்து வந்துள்ளான். இவனது காதலை சிறுமி தொடர்ந்து ஏற்க மறுத்து வந்துள்ளார். 

இந்த சூழ்நிலையில், மகனின் செயல்பாடுகளை கவனித்து வந்த ராஜரத்தினத்தின் தாயார், கடந்த 14 ஆம் தேதி மாணவியின் இல்லத்திற்கு சென்று மகன் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்காமல், சிறுமி மீது தவறு உள்ளது போல, " இந்த வயசுலயே காதலா? என்று கேள்வியை எழுப்பி, அவரின் சமூகம் குறித்து அவதூறாக " பேசியுள்ளார்.

இதனால் கடுமையான மன விரக்திக்கு உள்ளான சிறுமி, தூக்க மாத்திரையை தின்று தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இவரை மீட்ட பெற்றோர்கள், அங்குள்ள மருத்துவமனையில் அனுமதி செய்துள்ளனர். இந்த விஷயம் குறித்து சிறுமியின் பெற்றோர் அங்குள்ள மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, போக்ஸோ மற்றும் எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தாயையும், மகனையும் சிறையில் அடைத்துள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Trichy child girl Drama Love Torture Police arrest Mother and Son


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->