விடுமுறை தரவில்லை... ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்த தாம்பரம் போக்குவரத்து அதிகாரி!
transport officer Commits Suicide thambaram
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி ஆதனூரைச் சேர்ந்த மாநகரப் போக்குவரத்து கழகத்தின் தாம்பரம் பணிமனை ஜே.இ.யாகப் பணிபுரிந்து வந்த யுவராஜ் என்பவர், மறைமலைநகர் அருகே ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
யுவராஜ் தற்கொலை செய்வதற்கு முன்பு, காவல்துறை டி.ஜி.பி.க்குக் குறுஞ்செய்தி (SMS) ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், தனது தற்கொலைக்கு உயரதிகாரிகளே காரணம் என்று அவர் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
குறுஞ்செய்தியில் உள்ள குற்றச்சாட்டுகள்:
யுவராஜ் கழுத்து வலி காரணமாக கடந்த ஆகஸ்ட் 12, 2025 முதல் பணிக்குச் செல்லவில்லை. அவருக்குக் கடந்த 3 மாதங்களாகச் சம்பளம் வழங்கப்படவில்லை.
மேலும், அதிகாரிகள் அவரை வேலைக்கு வரக்கூடாது என நிர்பந்தித்ததாகவும், அவர் விடுப்பு கேட்டு விண்ணப்பித்தும் ஏ.இ. கோவிந்தராஜ் அதை நிராகரித்ததாகவும் யுவராஜ் குற்றம் சாட்டியுள்ளார்.
தமது மரணத்திற்கு ஏ.இ. கோவிந்தராஜ் மற்றும் மற்றொரு அதிகாரியான சொர்ணலதா ஆகிய இருவரும்தான் காரணம் என்று அவர் அந்தக் குறுஞ்செய்தியில் தெளிவாகத் தெரிவித்துள்ளார். இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
transport officer Commits Suicide thambaram