#வாணியம்பாடி || தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி சிறுவன் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


வாணியம்பாடி அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்ற போது ரயில் மோதி சிறுவன் உயிரிழந்து உள்ளார்.

வாணியம்பாடி அருகே சாலமாபாத் மசூதி பகுதியை சேர்ந்தவர் அயூப்கான். இவரது மகன் ஹாசிப்கான் வயது 17. நேற்று வாணியம்பாடி ரயில் நிலையம் புதூர் அருகே ஹாசிப்கான் தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார்.

அப்போது ஜோலார்பேட்டை காட்பாடி செல்லும் ரயில் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக சிறுவன் பலியாகியுள்ளார்.

இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், சிறுவனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Train collision kills boy in vaniyambadi


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->