தண்டவாளத்தில் சிக்கிய கைலி.! பறந்து வந்த ரயில்.! கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த சம்பவம்.!
train accident in thuthukudi
தூத்துக்குடி அருகே தண்டவாலத்தில் கைலி (Kylie) சிக்கிய காரணத்தால் ரயிலில் அடிப்பட்டு நகைக்கடை தொழிலாளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
தூத்துக்குடியில் சுந்தர்ராமபுரம் என்ற பகுதியை சேர்ந்த பாலகணேஷ் என்பவர், அன்றாடம் நடைபயிற்சி மேற்கொள்வதை வழக்கமாக கொண்டிருந்தார். அதுபோலவே இன்று காலையிலும் நடைபயிற்சிக்கு மேற்கொண்டுள்ளார். அப்பொழுது தூத்துக்குடி நான்காவது ரயில்வே கேட்டினை கடக்க முயற்சித்த போது எதிர்பாராத விபரீதம் ஏற்பட்டுள்ளது.
அப்பொழுது பாலகணேஷின் கைலி தண்டவாளத்தில் சிக்கி இருக்கின்றது. அப்பொழுது பதற்றத்தில் அவசர அவசரமாக கைலியை எடுக்க முயற்சித்துள்ளார். ஆனால், ரயில் தண்டவாளத்தில் மாட்டிய கைலியை எடுக்க முயற்சித்துள்ளார்.
ஆனால் எடுக்க முடியவில்லை. அப்பொழுது மின்னல் வேகத்தில் வந்த முத்துநகர் விரைவு ரயில் அவரை மோதியது, ரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே பாலகணேஷ் உயிர் இழந்துள்ளார். பாலகணேஷுக்கு காது கேட்காது என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.
English Summary
train accident in thuthukudi