வெளியூர் திரும்புபவர்களுக்கு நாளை முதல் சிறப்பு பேருந்துகள்.! அரசு அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி 12-ஆம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வந்த காரணத்தினால், தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. அதில், 75% பயணிகளுடன் பேருந்துகள் இயக்க அனுமதி அளித்தது. அதன் காரணமாக, வழக்கத்தை விட இந்த ஆண்டு 10 ஆயிரம் பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட்டது.

இந்த நிலையில் பொங்கல் பண்டிகை இன்றுடன் முடிவடையும் நிலையில் தமிழகம் முழுவதும் நாளை முதல் வெளியூர் திரும்புபவர்களுக்கு 16,709 பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக போக்குவரத்துக் துறை அறிவித்துள்ளது.

மேலும், பொங்கல் பண்டிகையையொட்டி 12-ஆம் தேதி முதல் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் சுமார் 8 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tomorrow start special bus service


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->