நாளை தொழில்நெறி விழிப்புணர்வு வாரம் : மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தகவல்!
Tomorrow is the Technical Awareness Week District Collector M Prathaps information
திருவள்ளூரில் தொழில்நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் வாரம் நாளை நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசின் அரசாணையில் ஆணையிடப்பட்டதின் அடிப்படையில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, இயக்குநர் அறிவுறுத்தலின் படி தமிழ்நாடு முழுவதும் உள்ள 38 மாவட்டங்களில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் வாயிலாக மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து ஜூலை 2-வது வாரத்தில் (09.07.2025 முதல்; 15.07.2025 வரை) தொழில்நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் வாரம் தொடர்பான நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.
அதன்படி 1 09.07.2025 அன்று மாற்றுத்திறனாளிகளுக்கான தொழில்நெறி வழிகாட்டும் மற்றும் திறன் விழிப்புணர்வு நிகழ்ச்சி,10.07.2025 அன்று மகளிருக்கான தொழில்நெறி வழிகாட்டும் மற்றும் திறன் விழிப்புணர்வு நிகழ்ச்சி, 11.07.2025 அன்று பொறியியல் கல்லூரியில் பயிலும் மாணவ மாணவியருக்கான தொழில்நெறி வழிகாட்டுதல் நிகழ்ச்சி, 14.07.2025 அன்று பள்ளி,கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தொழில்நெறி வழிகாட்டும் மற்றும் திறன் விழிப்புணர்வு நிகழ்ச்சி,15.07.2025 அன்று அரசினர் தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள் மற்றும் பாலிடெக்னிக் மாணவர்களுக்கான தொழில்நெறி வழிகாட்டும் மற்றும் திறன் விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து நடைபெறும்.
தொழில்நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் வார நிகழ்ச்சிகளில் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் கேட்டுக் கொண்டுள்ளார்.
English Summary
Tomorrow is the Technical Awareness Week District Collector M Prathaps information