கரூர் மக்களே மிஸ் பண்ணிடாதீங்க.! நாளை இலவச சித்தா, ஓமியோபதி மருத்துவ முகாம்..! - Seithipunal
Seithipunal


கரூர் மாவட்டத்தில் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை சார்பில், மக்களை தேடி இலவச மருத்துவ முகாம் நாளை நடைபெற உள்ளது.

இதுதொடர்பாக மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் எஸ்.காமராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

•இலவச சித்தா மற்றும் ஓமியோபதி மருத்துவ முகாம் நாளை கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் பழைய வளாகத்தில் காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறுகிறது.

•இந்த முகாமில் சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு, வயிற்றுப்புண், கோடை கால நோய்களான மூலம், பவுத்திரம், வைரஸ் காய்ச் சல், சிறுநீர் தொற்று, மலக்கட்டு, சளி, இருமல், தும்மல், மூக்கில் நீர் வடிதல், சைனஸ் பிரச்சினை,தூக்கமின்மை, மஞ்சள் காமாலை, மூட்டு வலிகள், தைராய்டு நோய், பெண்களின் மாதாந்திர தீட்டு பிரச்சினை, கருப்பைகட்டி, சினைப்பை நீர்க் கட்டி, அதிக உதிரப்போக்கு, நரைமுடி, முடி உதிர்தல், உடல் பருமன், குழந்தையின்மை இப்படி சகல நோய்களுக்கும் சிறப்பு பரிசோதனை மற்றும் மருந்துகள் இலவசமாக வழங்கப்படும். 

•எனவே இந்த முகாமில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tomorrow Free Siddha Homeopathy medical camp in karur


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->