நாளை கூடுதல் முன்பதிவு வில்லைகள்..பதிவுத்துறை உத்தரவு!
Tomorrow additional booking coupons..registration department order
எதிர்வரும் 27.06.2025, வெள்ளிக்கிழமை நாளை கூடுதலாக தட்கல் முன்பதிவு வில்லவகளும் பொதுமக்களி பயன்பாட்டிற்காக வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் 27.06.2025, வெள்ளிக்கிழமை சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு, பதிவு அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் வழங்கிட ஆவண செய்யக் கோரி தமிழ்நாடு பதிவுத்துறை தலைவர் அவர்களுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்தநிலையில் பதிவுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,சுபமுகூர்த்த தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்றைய தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
தற்போது ஆனி மாதத்தில் வரும் சுபமுகூர்த்த தினமான 27.06.2025 அன்று அதிகளவில் பத்திரப் பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதலாக முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யுமாறு பல்வேறு தரப்பு கோரிக்கை விடுத்தது.
எனவே. ஆனி மாதத்தில் வரும் சுபமுகூர்த்த தினம2706.2025 அன்று ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 முன்பதிவு வில்லைகளும் இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 முன்பதிவு வில்லைகளும் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு வில்லைகளோடு ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு வில்லைகள் கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு வில்லவகளும் பொதுமக்களி பயன்பாட்டிற்காக வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது.
English Summary
Tomorrow additional booking coupons..registration department order