தமிழகத்தில் இன்று முதல் ஊரடங்கு அமல்.. எதற்கு அனுமதி.? எதற்கு அனுமதி இல்லை.?
today night lockdown in tamilnadu
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் வரும் 10.1.2022 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் என தமிழக அரசு சமீபத்தில் அறிவித்திருந்தது.
இந்நிலையில், கொரோனா நோய் தடுப்பு கட்டுபாடுகளை வலுப்படுத்த தவறினால் நோய் பரவல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என மருத்துவ வல்லுனர்கள் தெரிவித்த நிலையில், முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் கடந்த 4ஆம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அந்த ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை முதலமைச்சர் நேற்று அறிவித்தார்.
அதன்படி, தமிழ்நாட்டில் கொரோனா நோய் பரவலை தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் உருமாறிய ஒமைக்ரான் பரவலை கருத்தில் கொண்டு மற்றும் பொதுமக்கள் நலன் கருதி ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு, வார நாட்களில் இரவு நேர ஊரடங்கு அறிவித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
மாநிலம் முழுவதும் 6.1.2022 முதல் வார நாட்களில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப்படும். இந்த நேரத்தில் அனைத்து வணிக வளாகங்கள், வணிக நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள் போன்றவற்றை செயல்பட அனுமதி இல்லை.

மாநிலத்திற்குள் பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய பணிகளான பல் விநியோகம், தினசரி பத்திரிக்கை வினியோகம், மருத்துவமனை, மருத்துவ பரிசோதனை கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவத் துறை சார்ந்த பணிகள், ஏடிஎம் மையங்கள், சரக்கு வாகனங்கள் மற்றும் எரிபொருள் வாகனங்கள் இரவு நேரத்திலும் அனுமதிக்கப்படும்.
பெட்ரோல் மற்றும் டீசல் பங்குகள் 24 மணி நேரமும் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும்.
உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்ப சேவை உள்ளிட்ட நிறுவனங்கள் செயல்பட அனுமதிக்கப்படும். பணிக்கு செல்லும் பணியாளர்கள் தொடர்புடைய நிறுவனங்களால் வழங்கப்படும் அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும். இருப்பினும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பணியாளர்கள் வீட்டிலிருந்து பணிபுரிய அறிவுறுத தொடர்புடைய நிறுவனங்களை கேட்டுக்கொள்ளப்படுகிறது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
English Summary
today night lockdown in tamilnadu