தமிழகத்தில் இன்று இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை.. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் கோவில் திருவிழாக்கள், சிறப்பு பண்டிகை உள்ளிட்ட தினங்களை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உலகப் புகழ்பெற்ற சிவஸ்தலங்களுள் ஒன்றான அருள்மிகு ஸ்ரீ சங்கரநாராயண சுவாமி சமேத கோமதி அம்பாள் திருக்கோவிலில் முக்கிய நிகழ்வான தபசு திருவிழா இன்று 10ம் தேதி மாலை 5.30 மணிக்கு மேல் நடக்கிறது.

இரவு காட்சி 12:00 மணிக்கு நடைபெறும் எனவும் திருக்கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் ஆடித்தபசை முன்னிட்டு இன்று 10ம் தேதி தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதன்படி, ஆகஸ்ட் 10 ஆம் தேதி தென்காசி மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும், அரசு அலுவலகங்கள், நிறுவனங்களுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளதாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதத்தில் ஆகஸ்ட் 13 ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Today local holiday for thenkasi district


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->