சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 280 உயர்வு.!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் சில நாட்களாக தங்கத்தின் விலை மாற்றத்தைச் சந்தித்து வருகிறது. முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது முதலீடு செலுத்தி வருகின்றனர். பெண்களுக்கு தங்கத்தின் மீதான மோகம் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

அதிலும் குறிப்பாக தமிழகத்தில் உள்ள பெண்களுக்கு தங்கத்தின் மீதான மோகம் சற்று அதிகம் தான். அதேபோல் அதிகம் தங்கம் வைத்துள்ள மாநிலம் என்றால் அதுவும் தமிழகம் தான்.

அந்தவகையில் நேற்று சென்னையின் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ₹-20 குறைந்து 4,885 ரூபாயாகவும், சவரன் ஒன்று 160 ரூபாய் குறைந்து 39,080 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டது.

ஆனால் இன்று கிராம் ஒன்றுக்கு 35 ரூபாய் அதிகரித்து 4,931 ரூபாய்க்கும், சவரன் ஒன்றுக்கு 280 ரூபாய் அதிகரித்து 39,448 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் வெள்ளி கிராம் ஒன்று 0.70 காசுகள் உயர்ந்து 68.20 ரூபாயாகவும், கிலோ ஒன்றுக்கு 700 ரூபாய் உயர்ந்து 68,200 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

today gold price


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->