தமிழகத்தில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. முழு விபரம்.! - Seithipunal
Seithipunal


மாண்டஸ் புயல் காரணமாக இன்று (10.12.2022) தமிழகத்தில் 15 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் தீவிரப் புயலாக உருவான 'மாண்டஸ்' புயலாக வலுவிழந்து, நேற்று இரவு 8.30 மணியளவில் சென்னையிலிருந்து தெற்கு-தென்கிழக்கே 110 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளதாக என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் 18 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்தத புயல், மாமல்மாமல்லபுரத்தில் நேற்று இரவு 11:30 மணி முதல் இன்று அதிகாலை 3 மணி வரை இந்த புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. எனவே இன்று தமிழகத்தில் கன முதல் மிக கனமழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மாண்டஸ் புயல் எதிரொலியாக இன்று வேலூர், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, நீலகிரி, கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சேலம் மற்றும் திருப்பத்தூர் ஆகிய 15 மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Today 15 districts holiday due to heavy rain


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->