திருச்சியில் அண்ணாமலைக்கு பேரிடி.!! வசமாக சிக்கிய 700 பேர்.!! - Seithipunal
Seithipunal


தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்றம் கழகம் சார்பாக திருச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் செந்தில் நாதனை ஆதரித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று இரவு பிரச்சாரம் மேற்கொண்டார். 

இந்த பிரச்சாரத்தில் சுமார் 700க்கும் மேற்பட்ட பாஜக ஆமாமுகா பாமக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர். 

அவ்வாறு அண்ணாமலை பங்கேற்ற பிரச்சாரம் 10 மணிக்கு மேல் நடத்தப்பட்டதாலும், போக்குவரத்து பாதிக்கப்பட்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டதாக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். 

இந்த புகாரின் அடிப்படையில் திருச்சி மாவட்ட காவல் துறையினர் பிரச்சாரத்தில் பங்கேற்ற தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அமமுக வேட்பாளர் செந்தில்நாதன் உட்பட பிரச்சாரத்தில் பங்கேற்ற 700 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tnpolice cases filed against 700 people including Annamalai


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->