குழந்தைகளுடன் கிணற்றில் மிதந்த தாய் - வேலூரில் சோகம்.! - Seithipunal
Seithipunal


வேலூர் மாவட்டம் பிச்சநத்தம் பகுதியைச் சேர்ந்தவர்கள் சுரேஷ், பவித்ரா தம்பதியர். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருந்தனர். இந்த நிலையில், பவித்ரா தினமும் தனது பிள்ளைகளை அருகில் உளள விவசாய கிணற்றுக்கு அழைத்துச் சென்று, நீச்சல் கற்றுக் கொடுத்துள்ளார்.

அதன் படி இன்று காலை பவித்ரா, தனது இரு பிள்ளைகளுடன் கிணற்றில் குளித்துக் கொண்டிருந்தப் போது எதிர்பாராதவிதமாக மூன்று பேரும் நீரில் மூழ்கியுள்ளனர். நீண்ட நேரமாகியும் இவர்கள் வீடு திரும்பாததால், சிறுமியின் சடலம் கிணற்றில் மிதப்பதைப் பார்த்த அப்பகுதி மக்கள் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் அளித்துள்ளனர்.

அந்தத் தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஒடுக்கத்தூர் தீயணைப்புத் துறையினரின் உதவியோடு கிணற்றில் சடலமாக கிடந்த மூன்று பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

three peoples droned well in vellore


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->