சுதந்திர தினத்தை முன்னிட்டு 15 காவல்துறை அதிகாரிகளுக்கு சிறப்பு பதக்கங்கள் - தமிழக அரசு அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


சுதந்திர தினத்தை முன்னிட்டு 15 காவல் துறை அதிகாரிகளுக்கு சிறப்பு பதக்கத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. 

மக்கள் சேவையில் தன்னலம் கருதாமல் செயல்பட்ட, சிறப்பாக புலன் விசாரணை செய்த காவல் துறை அதிகாரிகள் 15 பேருக்கு சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறப்பு பதக்கங்கள் வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

மேலும், 5 பேரின் பணியைப் பாராட்டி சிறந்த பொதுச் சேவைக்கான தமிழக முதலமைச்சரின் காவல் பதக்கம் வழங்கப்படுகிறது. அதன்படி,

சென்னை தெற்கு கூடுதல் காவல் ஆணையர் - பிரேம் ஆனந்த் சின்ஹா

கடலூர் தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் - அம்பேத்கர்

அடையாறு சிறப்பு எஸ் ஐ - சிவராமன்

 மதுரை போக்குவரத்து சிறப்பு எஸ்ஐ - பழனியாண்டி

செம்மஞ்சேரி போக்குவரத்து சிறப்பு எஸ்ஐ - குமார்.

ஆகியோருக்கு முதலமைச்சர் பதக்கம் வழங்கப்பட உள்ளன. இந்த விருது அறிவிக்கப்படுகிறவர்களுக்கு தங்க பதக்கம் மற்றும் ரூ.25 ஆயிரம் ரொக்கம் வழங்கப்படும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN govt announces medals for 15 police officers on independence day


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->