நிமிடத்தை கூட்டணி வீணடிக்காமல் இந்தியாவிற்காக உழைக்கும் பிரதமர் - தமிழக முதல்வர் பாராட்டு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலில், அதிமுக - பாமக - பாஜக - த.மா.க உட்பட பல கட்சிகள் இணைத்து தேசிய ஜனநாயக கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் கூட்டணிக்கட்சி தலைவர்கள் கலந்துகொண்ட கூட்டணி வேட்பாளர்கள் தேர்தல் பிரச்சார கூட்டம் தாராபுரத்தில் நடைபெற்றது. 

இந்த கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, " மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா அவர்களை வணங்கி, தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துகொள்ள வந்துள்ள இந்திய பிரதமர், உலகநாடுகளிடையே இந்திய நாட்டின் பெருமையை உயர்த்தி காண்பித்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள், பொதுமக்கள், வாக்காள பெருமக்கள் அனைவருக்கும் வணக்கம்.

நமது கூட்டணி வெற்றிக்கூட்டணி. அனைத்துத்தரப்பு மக்களும் உயரவேண்டும் என்று நரேந்திர மோடி ஓயாது உழைத்து வருகிறார். ஒரு நிமிடத்தை கூட வீணடிக்காமல் பணியாற்றி வருகிறார். நாட்டு மக்களின் பல கனவுகளை பிரதமர் மோடி நனவாக்கியுள்ளார். பிரதமர் மோடியின் உழைப்பால் இந்திய திருநாடு உயர்ந்துள்ளது. தமிழகத்திற்கு பல திட்டங்கள் பிரதமர் மோடியால் ஒத்துழைக்கப்பட்டு கொண்டு வரப்பட்டுள்ளது. மத்திய அரசும் - மாநில அரசும் இணக்கமாக இருந்தால் பல திட்டங்கள் நிறைவேற்றப்படும். 

தமிழகத்தின் உள்கட்டமைப்பு சிறப்பாக இருப்பதால், தமிழகத்தை நோக்கி பல்வேறு தொழில் நிறுவனங்கள் வருகிறது. கோடிக்கணக்கில் முதலீடு செய்கிறார்கள். இதனால் தமிழகம் மிகப்பெரிய வளர்ச்சியை அடைகிறது, இன்னும் பல வளர்ச்சியை அடையப்போகிறது. தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஸ்மார்ட் சிட்டி உருவாக்க மத்திய அரசு நிதி வழங்கியுள்ளது. அத்திக்கடவு - அவிநாசி திட்டம் நிறைவேற்றப்பட்டதும், பல பகுதிகள் பசுமையாக மாறப்போகிறது. 

கொரோனா சோதனையான காலத்திலும் மக்களுக்கு நிதி வழங்கி, இலவசமாக அரிசி, பருப்பு, சர்க்கரை போன்றவை இலவசமாக வழங்கப்பட்டது. பல்வேறு மக்களுக்கான திட்டங்களை அதிமுக அரசு நிறைவேற்றியுள்ளது. அதிமுக மற்றும் அதிமுக சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னத்திலும், பாஜக வேட்பாளருக்கு தாமரை சின்னத்திலும், பாமக வேட்பாளர்களுக்கு மாம்பழ சின்னத்திலும் வாக்களித்து அமோக வெற்றியை தாருங்கள் " என்று பேசினார்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN Election 2021 Edappadi Palanisamy Speech at Dharapuram 30 March 2021


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->