அம்பத்தூர் காவல் நிலையத்தில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திடீர் ஆய்வு.! - Seithipunal
Seithipunal


தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் நேற்று சென்னை ஆவடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டார். அதனைத்தொடர்ந்து திரும்பும் வழியில் அம்பத்தூர் காவல் நிலையத்தில் அவர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது வழக்குகளின் பதிவேடுகள் மற்றும் பொதுமக்கள் அளித்த புகார்களின் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அம்பத்தூர் காவல்துறை அதிகாரிகளிடம் அவர் விசாரித்தார். மேலும் அப்போது அங்கு பணியில் இருந்த அவருடன் அவர் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

அதை பின்னர் இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள், திமுக அரசு பொறுப்பேற்ற பின்னர் காவல்துறையினர் பல்வேறு சீர்திருத்தங்களை செய்து வருவதாகவும், நடைபெறும் சட்டசபை கூட்டத் தொடரில் காவல்துறை மானிய கோரிக்கை விரைவில் வர உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN CM MK Stalin's surprise inspection at the Ambattur police station


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->