#JustIN: ஆரணி அருகே காவல்துறை வேன் - கார் நேருக்கு நேர் மோதி விபத்து.. 1 பெண் பலி., 12 பேர் படுகாயம்.! - Seithipunal
Seithipunal


ஆரணி அருகே காவல்துறை வேன் - கார் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஒரு பெண்மணி பலியாகியுள்ளார். 

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணியை அடுத்துள்ள கண்ணமங்கலம் பகுதியில் காவல்துறை வேன் - தனியார் கார் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில், காரில் இருந்த பெண்மணி பரிதாபமாக பலியாகியுள்ளார். 

மேலும், காவல்துறை வாகனத்தில் பயணம் செய்த 12 க்கும் மேற்பட்ட காவல் அதிகாரிகள் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த வாகனங்கள் அழகுசேனை கிராம பகுதியில் உள்ள வளைவில் கார் - காவல்துறை வேன் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது. 

காவல் துறையினர் பயணித்த வேன் தலைகுப்பற கவிழ்ந்து இருக்கிறது. இந்த விபத்தை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், உள்ளூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்து தாங்களும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

காவல் துறையை சார்ந்த 2 பெண்களுக்கு படுகாயம், 7 பேருக்கு லேசான காயம் என மொத்தமாக 12 பேர் காயமடைந்து இருக்கின்றனர். எஸ்.பி அலுவலகத்தில் பணியாற்றி வரும் காவலர்கள் பயணம் செய்த வாகனம் விபத்திற்குள்ளாகியுள்ளது என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tiruvannamalai Arani Near Area Car Police Van Accident 1 Died 12 Injured


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->