கேக் வெட்டி நண்பருடன் பிறந்தநாள் கொண்டாட்டம்.. குடிபோதையில் இளைஞருக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்.!!
tiruvallur youth dies birthday party
சென்னை செங்குன்றத்தை அடுத்த அலமாதி கிருஷ்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் மாரி (வயது 20). இவர் தற்போது எலக்ட்ரீசியன் ஆக பணியாற்றி வருகிறார்.
இதனிடையே நேற்று மாரிக்கு பிறந்தநாள். நண்பருடன் பிறந்தநாள் கொண்டாட திட்டமிட்டு, கிருஷ்ணா நகர் பகுதியில் உள்ள மைதானத்தில் ஒன்று கூடியுள்ளனர். நண்பர்கள் ராமமூர்த்தி, லோகேஸ்வரன் ஆகியோருக்கு மாரி மது விருந்து வைத்துள்ளார். மாரிக்கு கேக் வாங்கி வந்த நண்பர்கள் அவரை கேக் வெட்ட வைத்துள்ளனர்.
கேக் வெட்டிய கேக்கை எடுத்து அவரது முகத்தில் பூசி நண்பர்கள், விளையாட்டாக மாரி தலையில் தாக்கியுள்ளனர். அப்போது திடீரென மயங்கி விழுந்துள்ளார். தட்டி எழுப்பியும் மாரி எழாததால் அதிர்ச்சி அடைந்த நபர்கள் மாரியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாரி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் சோழவரம் காவல் துறைக்கு தகவல் கொடுத்து. இதையடுத்து, காவல்துறையினர் விசாரணை தொடங்கி, நண்பர்கள் லோகேஸ்வரன் மற்றும் ராமமூர்த்தி பிடித்தனர். அவரிடம் நடந்த விசாரணையில் மதுபோதையில் விளையாட்டாக செய்தது கொலையில் முடிந்து விட்டதாக வாக்குமூலம் கொடுத்துள்ளனர். இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.
English Summary
tiruvallur youth dies birthday party