தென்காசி அருகே நெகிழ்ச்சி.. கணவர் இறந்த செய்தி கேட்டு, மனைவியும் இறந்த பரிதாபம்..! - Seithipunal
Seithipunal


74 வயது தமிழாசிரியை மனைவி, தனது கணவர் இறந்த செய்தியைக் கேட்ட அடுத்த கணமே உயிரை விட்ட சோகம் அரங்கேறியுள்ளது. 

தென்காசி மாவட்டத்திலுள்ள திருவேங்கடம் குலசேகரன்கோட்டை பகுதியைச் சேர்ந்த 74 வயதான தமிழாசிரியர் சண்முகவேல். அரசு பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி ஜிஜி பாய். கடந்த ஐம்பது வருடங்களுக்கு முன்னதாக பெற்றோர் பார்த்து வைத்த திருமணத்தால் இணைந்த தம்பதிகள், கணவன் மனைவியின் அன்புக்கு அடையாளமாய் இருந்து வந்துள்ளனர். 

இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். மூத்த மகன் தலைமையாசிரியராக பணியாற்றி வருகிறார். மூன்றாவது மகன் தர்மபுரியில் வசித்து வரும் நிலையில், இரண்டாவது மகன் சொந்த கிராமத்தில் இருக்கிறார். இந்த தம்பதிகள் இருவரும் இரண்டாவது மகனுடன் சொந்த கிராமத்தில் இருந்து வருகின்றனர். 

இந்நிலையில், உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சண்முகவேல், திடீரென செவ்வாய்க்கிழமை உயிரிழந்த நிலையில், சண்முகவேல் இறந்த செய்தியைக் கூறினால் தாயின் உடல் நலமும் பாதிக்கப்படும் என்று கருதிய மகன்கள் அதனை கூறாமல் இருந்து வந்துள்ளனர். 

தங்களது வீட்டிற்கு ஆட்கள் வந்து செல்வதைக் கண்ட தாய் மகனிடம் என்ன விஷயம்? என்று கேட்கவே அவர்கள் தந்தையின் இறப்பை மறைத்துள்ளனர். உண்மையை புரிந்து கொண்ட அவர், என்னை கணவர் விட்டு சென்று விட்டாரா? என்று அலறியபடி பெரு மூச்சு வாங்கி தரையில் சாய்ந்தார். 

இதில், வீட்டிலேயே ஜிஜி பாய் இடத்திலேயே உயிரிழந்த நிலையில், அவரது மகன்கள் மற்றும் உறவினர்கள் பெரும் சோகத்திற்கு உள்ளாகினர். தற்போது உள்ள சூழ்நிலையில் கண்டதும் காதல், 
4 நாளிலேயே மோதல், மதுபோதையில் மனைவியை துன்புறுத்துவது, வரதட்சணை கேட்டு துன்புறுத்துவது, புரிதல் இல்லாமல் தம்பதிகளுக்குள் சண்டையிடுவது என்று பல சோகங்கள் அரங்கேறி வரும் நிலையில், இந்த தம்பதிகள் இருவரும் காதல், அன்பு, அரவணைப்பு என்று வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டங்களுக்கும் அர்த்தமாக வாழ்ந்து மறைந்துள்ளனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tirunelveli Tenkasi Thiruvengadam Aged couple Love Death 22 April 2021


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->