வண்டி டாக்குமெண்ட் கேட்டதற்கு அரிவாளை காண்பித்து மிரட்டிய கயவர்கள்.. மடக்கிப்பிடித்து கைது செய்த அதிகாரிகள்.!
Tirunelveli Police Arrest 2 Youngster Threaten Police Officers
காவல் அதிகாரிகளிடம் அரிவாளை காண்பித்து மிரட்டிய 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ரௌடிகளை ஒடுக்கும் விதமாக காவல் துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சீதபற்நல்லூர் அருகே நேற்று இரவு வல்லவன்கோட்டை காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தனர்.
இதன்போது, அவ்வழியாக வந்த 2 வாலிபர்கள், இருசக்கர வாகனத்தில் சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்துள்ளனர். இவர்களை மறித்து காவல் அதிகாரிகள் விசாரணை செய்கையில், அவர்கள் காவல் துறையினருடன் வாக்குவாதம் செய்துள்ளனர்.
காவல் துறையினர் இருசக்கர வாகனத்திற்கான ஆவணத்தை கேட்கவே, வாலிபர்கள் 2 பேரும் வாகனத்தில் மறைத்து வைத்திருந்த அரிவாளை காண்பித்து அதிகாரிகளை மிரட்டியுள்ளனர். இதற்கு பயம் கொள்ளாத அதிகாரிகள், இருவரையும் மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.
அவர்களிடம் நடந்த விசாரணையில், கைதாகிய இருவரும் வல்லவன்கோட்டை பகுதியை சார்ந்த சிவ சுரேஷ் (வயது 19), அபினேஷ் (வயது 19) என்பது தெரியவந்தது. இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர், இருவரிடமும் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Tirunelveli Police Arrest 2 Youngster Threaten Police Officers