சோகம்.. சுடுகஞ்சி ஊற்றி 3 வயது குழந்தை பலி.!! - Seithipunal
Seithipunal


செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள செய்யூர் அடுத்த சின்ன வெண்மணி கிராமம் சக்தி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் லட்சுமணன். இவருக்கு மூன்றரை வயதில் தீபிகா என்ற பெண் குழந்தை இருந்தது. இந்தக் குழந்தை கடந்த 11-ந்தேதி வீட்டில் அடுப்பில் வைக்கப்பட்டிருந்த சாப்பாட்டு உலை பாத்திரத்தை குழந்தை பிடித்து இழுத்துள்ளது.

அப்போது எதிர்பாராதவிதமாக தீபிகாவின் மீது சுடுகஞ்சி கொட்டியதால் குழந்தை
வலியால் அலறி துடித்துள்ளது. இந்த சத்தம் கேட்டு ஓடி வந்த அவரது பெற்றோர் குழந்தையை சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். 

அதன் பின்னர் மேல் சிகிச்சைக்காக, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த குழந்தை தீபிகா நேற்று பரிதாபமாக உயிரிழந்தது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

three years old baby died in chengalpat


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->