வண்ணாரப்பேட்டை || நண்பனைத் தாக்கிய ஆத்திரம் - வாலிபரை கொலை செய்த 3 பேர் கைது.! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள பழைய வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சோபன். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த பிரசாத் என்பவருக்கும் நேற்று இரவு மதுபோதையில் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது சோபன், பீர் பாட்டிலால் பிரசாத்தை தாக்கியுள்ளார்.

இதையறிந்த பிரசாத்தின் நண்பர்கள், ஜோதிபாசு, நிர்மல் குமார், சுரேஷ் உள்ளிட்டோர் ஆத்திரத்தில் சோபனை கடுமையாக தாக்கியுள்ளனர். அதில், ஜோதிபாசு தன்னிடம் இருந்த கத்தியால் சோபனை சரமாரியாக குத்தியுள்ளார். 

இதனால், நிலைகுலைந்து போன சோபன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீஸார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சோபனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் போலீசார் சம்பவத்தில் ஈடுபட்ட, ஜோதிபாசு, நிர்மல், சுரேஷ் உள்ளிட்டோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். புத்தாண்டு நாளில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

three peoples arrested for murder in old vannarapettai


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->