மாஸ் காட்டிய போலீஸ்! தேனியில் மூன்று கிலோ கஞ்சா பறிமுதல்! - Seithipunal
Seithipunal


தேனியில் மூன்று கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக மூன்று பேரை காவல்துறை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ்நாட்டில் கஞ்சா கடத்துவதும் விற்பனை செய்வதும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் போதை பொருள்களின் எண்ணிக்கையும் போதைப் பொருள்களை பயன்படுத்தவர்கள் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது தமிழ்நாட்டில் கஞ்சா விற்பனை தலை தூக்கி உள்ளது.

இந்த நிலையில் தேனி மாவட்டம் கண்டமனூர் வருசநாடு சாலையில் வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டு கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அந்த சாலையில் வந்து வாகனத்தை நிறுத்து போலீசார் வாகனத்தில் வந்தவர்களை விசாரணை செய்துள்ளனர்.

விசாரணைபோது அவர்கள் காவல்துறையினரிடம் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது. இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறை சோதனை செய்து பார்த்தபோது அவர்களிடம் மூன்று கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை அடுத்து காவலர்கள் உயர் அதிகாரிக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவல் அறிந்த அங்கு வந்து உயர் அதிகாரிகள் மூன்று கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தது மட்டுமில்லாமல் கஞ்சா கடத்தி வந்த குற்றத்திற்காக மூன்று பேரையும் கைது செய்து காவல் நிலையம் அனைத்து சென்று விசாரணை நடத்தி தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Three kilos of ganja seized in Theni


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->