#திருவண்ணாமலை || மின்சாரம் பாய்ச்சி கொலை செய்ய முயன்ற நபர் மின்சாரம் தாக்கி பலி.! காப்பாற்ற முயன்றவரும் பலியான சோகம்.! - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலை அருகே மாட்டு கொட்டகையில் தூங்கிக்கொண்டிருந்த நபரை, மின்சாரம் வைத்து கொலை செய்ய முயன்ற நபரும், காப்பாற்ற முயன்ற நபரும் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், சொரகொளத்தூர் பகுதியை சேர்ந்த ஏழுமலை என்பவர், முன்விரோதம் காரணமாக சரண்ராஜ் என்பவரை மின்சாரம் வைத்து கொலை செய்ய முயன்றுள்ளார்.

இரவு சுமார் 12 மணி அளவில் தனது தோட்டத்தில் அமைந்துள்ள மாட்டுக் கொட்டகையில் சரண்ராஜ் கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த போது, ஏழுமலை மின்சாரம் வைத்து கொலை செய்ய முயன்றுள்ளார். அப்போது திடீரென கண் விழித்துக் கொண்ட சரண்ராஜ் சத்தம் போடவே, பக்கத்து வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த ரேணுகோபால் என்பவர் ஏழுமலையை தடுக்க முயற்சி செய்துள்ளார்.

அப்போது ஏழுமலை வைத்திருந்த மின்சார வயர் ரேணுகோபால் மீது படவே, அவர் மீது மின்சாரம் பாய்ந்தது, மேலும் ஏழுமலை மீது மின்சாரம் பாய்ந்து இருவருமே சம்பவ இடத்திலேயே மின்சாரம் தாக்கி பலியாகினர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், மின்சாரம் தாக்கி உயிரிழந்த ஏழுமலை மற்றும் ரேணுகோபால் ஆகியோரின் உடல்களை கைப்பற்றி திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

முன்விரோதம் காரணமாக நடந்த இந்த கொலை முயற்சி சம்பவத்தில் காப்பாற்ற முயன்றவரும், கொலை செய்ய முயன்றவரும் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thiruvannamalai sorakolathur attempt murder


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->