அதிர்ச்சி: பள்ளி தாளாளரின் கணவரால் பாலியல் பலாத்காரம்.. மாணவிக்கு ஏற்ப்பட்ட கொடுமை.!  - Seithipunal
Seithipunal


பள்ளி தாளாளரின் கணவரால் திருவண்ணாமலை மாவட்ட சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட கொடுமை அரங்கேறியுள்ளது. 

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள போளூர் அருகே கங்கை சூடாமணி என்ற கிராமத்தில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் யுகேஜி படித்துக் கொண்டிருந்த சிறுமிக்கு திடீரென்று உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து அந்த சிறுமி உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த விஷயம் பெற்றோருக்கு தெரிய வந்ததும் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதற்கிடையில் சம்பவம் குறித்து விசாரணை நடத்தியதில் பள்ளி தாளாளரின் கணவரான காமராஜ் சிறுமிக்கு சாக்லேட் வாங்கி கொடுத்து தான் சொல்லும் படி கேட்க வேண்டும் என்று கூறி பலாத்காரம் செய்திருப்பது தெரியவந்துள்ளது.

இது குறித்து தகவல் வெளியில் லீக் ஆனவுடன் காமராஜ் தலைமறைவாகிவிட்டார். அவரது செல்போன் எண்ணை வைத்து போலீசார் ஆய்வு செய்வதில் அவர் தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் எட்டயபுரத்தில் தலைமறைவாக இருந்தது கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Thiruvannamalai school LKG student Raped


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->