திருவள்ளூர் பள்ளி மாணவி தற்கொலை விவகாரம்.! உடலை வாங்க பெற்றோர் மறுப்பு.!! - Seithipunal
Seithipunal


திருவள்ளூர் மாவட்டம் கீழச்சேரி ஊராட்சியில் உள்ள அரசு உதவி பெறும் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவி சரளா விடுதியில் தங்கி பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று காலை மாணவி சரளா வழக்கம் போல் பள்ளிக்கு செல்ல சீருடை அணிந்து, விடுதியில் இருந்த சக மாணவிகளுடன் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. 

பின்னர் சக மாணவிகள் உணவு அருந்த சென்று விட்டனர். அப்போது தனியாக இருந்த சரளா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இன்று காலை பிரேத பரிசோதனை நடைபெற்றது. 

இந்நிலையில், பிரேத பரிசோதனைக்கு பின்னர் உடலை வாங்க பெற்றோர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். தற்கொலைக்கான காரணம் தெரிவித்தால் மட்டுமே உடலை வாங்குவோம் என மாணவியின் உறவினர்கள் மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Thiruvallur student suicide issue


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->