#திருப்பூர் : வேலைக்கு சென்ற தம்பதி வீட்டில் கண்ட காட்சி.. சிசிடிவியை பார்த்து அதிர்ச்சி.! - Seithipunal
Seithipunal


திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் அருகே அல்லாளபுரம் பகுதியில் நடராஜன் என்ற நபர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். நடராஜனும் அவருடைய மனைவியும் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வந்துள்ளனர். அன்றாடம் இருவருமே வேலைக்கு சென்று வீடு திரும்புவது வழக்கம்.

சம்பவ தினத்தன்றும் கணவன் மனைவி இருவரும் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றுள்ளனர். வேலை முடிந்து இரவு இருவரும் ஒன்றாக வீடு திரும்பினார்கள். அப்போது அவர்களது வீட்டை சில மர்ம நபர்கள் பூட்டை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைவதை பார்த்துள்ளனர்.

இதனை தொடர்ந்து தங்கள் வீட்டில் இருக்கும் சிசி டிவி கேமராக்களை பார்க்க துவங்கினார்கள். அதில் முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர் இரும்பு கம்பியுடன் கதவின் பூட்டை உடைக்க முயன்றதை பார்த்துள்ளனர். இந்த சம்பவம் பற்றி போலீசிடம் நடராஜன் புகார் கொடுத்துள்ளார்.

நடராஜன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சி சி டிவியில் பதிவாகியுள்ள காட்சியின் அடிப்படையில் பூட்டை உடைத்து கொள்ளை அடிக்க முயற்சித்தது யார் என்பதை கண்டறியும் நோக்கத்தில் விசாரணை செய்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thiruppur couples shock with CCTV footage


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->