தொடர்ந்து 4-வது நாளாக உள்வாங்கிய திருச்செந்தூர் கடல்.. அதிர்ச்சியில் பக்தர்கள்.! - Seithipunal
Seithipunal


திருச்செந்தூர் கடல் கடந்த 3 நாட்களாக உள்வாங்கிய நிலையில், இன்று நான்காவது நாளாக உள்வாங்கியதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஒவ்வொரு மாதமும் அமாவாசை தினத்தன்று திருச்செந்தூர் கடல் நீர் லேசாக உள்வாங்குவதும், அமாவாசை முடிந்ததும் இயல்புநிலை திரும்புவது வழக்கமாக உள்ளது.

ஆனால், இந்த மாத அமாவாசைக்கு முன்பே ஒரு நாளும் அதன் பிறகு இரண்டு நாளும் என மூன்று நாட்கள் திருச்செந்தூர் கடல் உள்வாங்கியது. இதனையடுத்து அமாவாசை முடிந்த பிறகு இன்றும் கடல் உள்வாங்கி இருப்பது திருச்செந்தூர் பகுதி மக்கள் மற்றும் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்செந்தூர் கடல் நீர் சுமார் 200 அடி வரை உள்வாங்கி உள்ளதால் கடலில் உள்ள பாறைகள் வெளியே நன்றாக தெரிகின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thiruchendur sea which entered for the 4th consecutive day


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->