மதுரை அருகே பழிக்குப் பழியாக வீடு புகுந்து வாலிபர் வெட்டிக்கொலை - போலீசார் விசாரணை
The youth murder into the house in madurai
மதுரை மாவட்டத்தில் பழிக்குப் பழியாக வீடு புகுந்து இளைஞர் சரமாரியாக வெட்டிக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை மாவட்டம் கரிசல்குளம் பகுதியை சேர்ந்தவர் கட்டிட தொழிலாளி பூமிநாதன் (21). இவரை நேற்று மாலை வீடு புகுந்து நான்கு பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த கூடல் புதூர் போலீசார், பூமிநாதனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணையில், கடந்த ஆண்டு கூடல்புதூர் பகுதியை சேர்ந்த பிரவீன் என்பவரை 10 பேர் கொண்ட கும்பல் கொலை செய்ததும், அதில் நான்காவது குற்றவாளியாக பூமிநாதன் இருந்ததும் தெரியவந்தது.
மேலும் பிரவீனை கொலை செய்தவர்களை பழிக்குபழியாக கொலை செய்வோம் என்று அவரது நண்பர்கள் கூறியிருந்ததால், பூமிநாதனை பழிவாங்குவதற்கு கொலை செய்திருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் பூமிநாதனை சரமாரியாக வெட்டி கொன்ற நான்கு பேர் கொண்ட கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.
English Summary
The youth murder into the house in madurai