அழுகிய நிலையில் பிணமாக மீட்கப்பட்ட பெண்.. காவல்துறையினர் தீவிர விசாரணை..!
The woman whose body was recovered in a decomposing state
அழுகிய நிலையில் பெண் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணாய் மேற்கொண்டு வருகின்றனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள துலக்கனூர் பகுதியில் உள்ள கழிவுநீர் தொட்டியில் அடையாளம் தெரியாத பெண் பிணம் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் சடலத்தை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்து வழக்குபதிவு செய்தனர். இறந்த பெண்ணுக்கு 50 வயது இருக்குமென தெரிவித்தனர். மேலும், இறந்தவர் யார் அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது அவர் நிர்வாண கோலத்தில் இருந்ததால் அவரை யாராவது பாலியல் வன்கொடுமை செய்யபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
The woman whose body was recovered in a decomposing state