கணவரை அறிவாளால் வெட்டிய மனைவி.! கோவை அருகே பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


கோவை மாவட்டத்தில் கணவரை மனைவி அறிவாளால் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் கோட்டூர் மலையாண்டிபட்டினம் பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி காளியப்பன் (55). இவருடைய மனைவி சத்தியவாணி (55). இந்நிலையில் கணவன்-மனைவியிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 6 மாதமாக பிரிந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, பேத்திக்கு சீர் செய்வதில் ஏற்பட்ட அதிக பண செலவு காரணமாக காளியப்பன், வீட்டை விற்க முடிவு செய்தார். இதனால் கணவன்-மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் வாக்குவாதம் முக்கிய நிலையில் ஆத்திரமடைந்த சத்தியவாணி கணவர் காளியப்பனை தகாத வார்த்தையால் திட்டி அறிவாளால் வெட்டியுள்ளார்.

இதையடுத்து பலத்த காயமடைந்த காளியப்பனை மீட்டு சிகிச்சைக்காக கோட்டூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்பு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், வழக்கு பதிவு செய்து கணவரை அறிவாளால் வெட்டிய மனைவி சத்தியவாணியை கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The wife who cut her husband in kovai


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?


செய்திகள்



Seithipunal
--> -->