கணவர் கண் எதிரே பஸ் சக்கரத்தில் சிக்கி மனைவி பலியான சோகம்! - Seithipunal
Seithipunal


கணவர் கண் எதிரே மனைவி பஸ் சக்கரத்தில் சிக்கி பலியான சம்பவம்  தக்கலை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம்  ஆசாரிபள்ளம் பகுதியை சேர்ந்தவர் தொழிலாளியான ஜோஸ் ஸ்டீபன்,இவருக்கு  2 பெண் குழந்தைகள் உள்ளனர்.37 வயதான இவருடைய மனைவி பிந்து தனது உறவினருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதையடுத்து அவரை பார்ப்பதற்காக நேற்று பிந்துவும் அவரது கணவர் ஜோஸ் ஸ்டீபனும் ஒரே பைக்கில் களியக்காவிளைக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டுக்கு புறப்பட்டனர். 

இந்தநிலையில் தக்கலை அருகே மணலி பகுதியில் பைக் வந்த போது நிலை தடுமாறி பைக்கில் இருந்து ஸ்டீபனும், பிந்துவும் கீழே விழுந்தனர். அப்போது,  பின்னால் வந்து கொண்டிருந்த அரசு பஸ்சின் பின் சக்கரம் பிந்து மீது ஏறி இறங்கியதில் படுகாயம் அடைந்த பிந்துவை அவரது கணவரும், அருகில் நின்றவர்களும் மீட்டு தக்கலை மருத்துவமனையில் அனுமதித்தனர். 

அங்கு பிந்துவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இந்த விபத்தில் ஜோஸ் ஸ்டீபன் காயமின்றி உயிர் தப்பினார். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவர் கண் எதிரே மனைவி பஸ் சக்கரத்தில் சிக்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The tragedy of a wife dying in a bus wheel in front of her husband


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->