திண்டுக்கல்.! தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்தவர் பலி - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டத்தில் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே நாக கோணனூரை சேர்ந்தவர் பழனிசாமி(31). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு விபத்தில் சிக்கி படுகாயமடைந்து கையில் கட்டு போட்டுள்ளார்.

இதையடுத்து பழனிசாமி தொட்டியில் தண்ணீர் எடுக்க முயன்ற போது எதிர்பாராத விதமாக தவறி தொட்டியில் விழுந்துள்ளார்.

இந்நிலையில் காயமடைந்ததால் பழனி சாமியால் தொட்டியில் இருந்து எழுந்திருக்க முடியவில்லை. இதனால் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்து உள்ளார். 

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த வேடசந்தூர் காவல்துறையினர், உயிரிழந்த பழனிசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The person who fell into the water tank was killed


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->