மாட்டு வண்டியில் ஊர்வலம் சென்ற புதுமண தம்பதி.. ஆச்சரியத்துடன் பார்க்கும் பொதுமக்கள்.! - Seithipunal
Seithipunal


புதுமணமான புது ஜோடி மாட்டு வண்டியில் சென்றதை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

நாமக்கல் மாவட்டம் மாமரத்துப்பட்டி பகுதியில் ராசா முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மோகனாம்பாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு அஜித்குமார் என்ற மகன் உள்ளார். 

இவர் லண்டனில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் அஜித்குமாருக்கும், கௌதமி என்ற பெண்ணுக்கும் சுண்டக்கா செல்லாண்டியம்மன் கோவிலில் வைத்து திருமணம் நடைபெற்றது.

இதனையடுத்து கோவிலில் இருந்து மணமக்கள் மாட்டு வண்டியில் மோகனூர் வழியாக மணமகன் வீட்டிற்கு சென்றனர். இதனை சாலையில் சென்ற பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். இதுகுறித்து மணமக்கள் கூறும் போது, தமிழர்களின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் விதமாக மாட்டுவண்டியில் சென்றதாக தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The newlywed couple went in procession in a cow cart


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->